திருப்பூர் கணியம்பூண்டி அரசு பள்ளி அருகில் ராக்கியாபாளையம் செல்லும் ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எல்.என்.டி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவ், திருப்பூர்.