கிணறு தூர்வாரப்படுமா?

Update: 2025-06-01 20:01 GMT

சேலம் தாதம்பட்டி பகுதிக்கு உள்பட்ட நாகர்படையாச்சி காட்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் நடுவே ஒரு பொதுக்கிணறு உள்ளது. இங்குள்ளவர்களின் குடிநீர் ஆதாரமாக இந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக கிணற்றை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் கிணறு, மண் சரிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் கிணற்றில் உள்ள குப்பைகளை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

-ராஜா, அம்மாபேட்டை.

மேலும் செய்திகள்