குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2025-05-25 17:44 GMT

திருப்பூர் மாநகர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டவுன் எக்ஸ்டன்சன் முதல் வீதியில் கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதன் அருகே மருத்துவமனை உள்ளதால் தினமும் ஏராளமானோர் குழாய் உடைந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்தில் கடந்து செல்கின்றனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் இதுபோன்ற குழாய் உடைப்பால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


மேலும் செய்திகள்