புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட தாவூத் மில் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பொதுமக்களின் தேவைக்காக மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் மின் மோட்டார் பகுதாகி 3 மாதங்களுக்கு மேல் ஆவதால், பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த மின் மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.