செய்யாறு ஒன்றியம் மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெகுதூரம் சென்று தண்ணீரை தலையில் சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-செல்லப்பாண்டி, விண்ணமங்கலம்.