பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே தேனம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.