வீணாகும் குடிநீர்

Update: 2025-03-09 17:05 GMT

சேலம் 4 ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் காலை, மாலை இரு வேளையிலும் தண்ணீர் திறந்துவிடும்போது இதேநிலை நீடிக்கிறது. அப்போது சாலையில் குடிநீர் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைத்தால் குடிநீர் வீணாவதை தடுக்கலாம்.

-ராம், சேலம் 4 ரோடு.

மேலும் செய்திகள்