பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தூரத்துக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு போதிய குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.