தேங்கும் மழைநீர்

Update: 2024-06-09 15:10 GMT

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள சோலாடி பகுதியில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவ்ககை எடுக்கவில்லை. இதன் காரணமாக மழை பெய்யும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் கொசு உற்பத்தியும் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்