குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-05-26 10:20 GMT

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் குடிநீர் திறந்து விடும்போது ஏராளமான குடிநீர் உடைந்த குழாய்கள் வழியாக வீணாகிறது. இதனால் மண்ணைரை பகுதிக்கு 10 நாட்கள் கடந்துதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்