வர்ணம் பூச வேண்டிய வேகத்தடை

Update: 2024-05-05 18:26 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இ.பி. காலனி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஒரு வழி பாதையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் அரசு, தனியார் பள்ளிகள், பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்து வருகின்றன. இங்கு புதியதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரிவதில்லை. பலர் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணியன், ராசிபுரம்.

மேலும் செய்திகள்