Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Jun 2024 5:56 PM GMT
Mr.Nagarajan | சங்ககிரி
#47803

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சிக்குட்பட்ட டி.வி.ஆர். நகரில் சமீபகாலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விமல்ராஜ், மகுடஞ்சாவடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#47800

தோண்டிய பள்ளத்தை மூடலாமே!

சாலை

சேலம் இரும்பாலை புதுரோடு முத்துநாய்க்கன்பட்டி பிரிவு சாலையில் சமீபத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைகின்றன. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதி சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே! -வெங்கடாசலம், சுந்தர்நகர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#47790

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் தாலுகா துட்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொட்டையங்காடு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மோசமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை விரைந்து சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், துட்டம்பட்டி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#47788

வாகன ஓட்டிகளால் பயணிகள் அவதி

போக்குவரத்து

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிகள் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் விரைந்து சென்று பஸ்களை பிடிக்க மிகவும் அவதியடைகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்குவதால் டிரைவர்கள், பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்துபவர்கள் மற்றும் வேகமாக இயக்குபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், குப்தா நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:38 PM GMT
Mr.Nagarajan | சேந்தமங்கலம்
#47785

ஆபத்தான பள்ளம்

போக்குவரத்து

சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் கொல்லிமலை, ராசிபுரம், சேந்தமங்கலம் செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இந்த முக்கியமான சாலையில் சிறிய அளவில் பள்ளம் தோன்றியுள்ளது. அந்த பள்ளத்தை உற்று நோக்கினால் கீழே செல்லும் கழிவுநீர் கால்வாய் தெரிகிறது. எனவே இந்த ஆபத்தான பள்ளம் பெரிதாகி பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் பள்ளத்தை மூட வேண்டும். -சேகர், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47784

மின்விளக்குகள் அமைக்கலாமே!

மின்சாரம்

வெண்ணந்தூர் அடுத்த சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பத்தான் புதூர் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சுரங்கப்பாதையை யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுமன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:29 PM GMT
Mr.Nagarajan | இராசிபுரம்
#47781

கூடுதல் பஸ்கள் வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல் நாமக்கல் செல்லும் வழியில் தனியார் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ராசிபுரத்தில் இருந்து இந்த கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47779

மின்கம்பத்தில் செடி, கொடிகள்

மின்சாரம்

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் எம்.ராசாம்பாளையம் மேடு உள்ளது. மேடு ஏறும் இடத்தில் சாலையில் மேற்கு பகுதியில் தார்சாலையையொட்டி ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் அருகில் உள்ள மரங்களில் இருந்து கொடிகள் படர்ந்து மின்கம்பமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன. கொடிகள் பின்னிப்பிணைந்து மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களில் படர்ந்து காட்சியளிக்கிறது. எனவே மின்வாரிய பணியாளர்கள் இந்த மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும். -ராமசாமி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:25 PM GMT
Mr.Nagarajan | திருச்செங்கோடு
#47777

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி ஊராட்சி மொளசி மூணு இட்டேறி முக்கில் இருந்து வக்கீல் தோட்டம் வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47768

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நான்கு ரோடு பகுதியை கடப்பதற்குள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். -பிரபாகரன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47765

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே விரைந்து கழிவு கால்வாய் அமைத்து தர வேண்டும். -கணேசன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:09 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#47763

சாக்கடை வசதி

கழிவுநீர்

பென்னாகரம் -தர்மபுரி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அவ்வை நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. பிரதான சாலை என்பதால் அவ்வழியே பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தவாறு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெருமாள், நாகதாசம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick