பழுதடைந்த மின் மோட்டார்

Update: 2026-07-19 17:48 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மினிகுடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்