கொல்லிமலையில் நம் அருவியில் உபரி நீர் வெளியேறும் போது அப்பகுதியில் உள்ள விவசாய பாசனத்திற்காக சிறு வாய்க்கால் மூலம் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வாய்க்கால் அருகே உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை அந்த வாய்க்காலில் போட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடைப்பு ஏற்பட்டு அசுத்தம் ஆகி வருகிறது. எனவே வாய்க்காலில் கழிவுகள் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.