திமிரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், ஆற்காடு, அரக்கோணம், வாலாஜா, வேலூர், செய்யாறு, திருவண்ணாமலை, போளூர், கண்ணமங்கலம் உள்பட பல ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றுவர பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். அங்கு பஸ்சுக்காகக் காத்திருந்து பஸ் ஏறும் வரை குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை. வசதி இல்லாதவர்கள் டீக்கடைகளுக்கு சென்று தண்ணீர் குடிக்கின்றனர். சிலர் பணம் கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
-கோகுல், திமிரி.