கொல்லிமலை அடிவாரம் கருவாட்டாற்று பகுதியில் இருந்து சேந்தமங்கலத்திற்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெண்டாங்கி, சாமி காடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி குழாய் சேதமடைந்து குடிநீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. எனவே தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படுமா? என அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.