தண்ணீா் பற்றாக்குறை

Update: 2024-05-05 18:24 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் தற்போது அதிக அளவிலான வீடுகள் உள்ளன. தற்போதுள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீரின் கொள்ளளவு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் 2 வருட காலமாக தண்ணீர் திறந்து விடாத நிலையில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் 2 ஆண்டு காலமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் விடப்படுகிறது. எனவே அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்து, கோடை கால தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுசி, குமாரபாளையம்.

மேலும் செய்திகள்