தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?

Update: 2024-03-17 12:29 GMT

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கோடை காலத்தில் கால்நடைகளின் தாகம் தீர்க்க, ஆங்காங்கே தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். தற்போது கோடை காலம் தொடங்கி கடுமையான வெயில் வாட்டி வருகிறது. ஆனால் அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் தாகம் தீர்க்க முடியாமல் கால்நடைகள் தவித்து வருகின்றன. எனவே அந்த தொட்டிகளின் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

மேலும் செய்திகள்