குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-03-03 12:54 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியும் நிலைக்கு ஆளாகின்றனர். சிலர், பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். எனவே தட்டுப்பாடு இன்றி சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்