உப்பு தண்ணீர் வேண்டும்

Update: 2023-12-17 12:24 GMT

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு பின்புறம் ஹவுசிங் யூனிட்(ஏ) அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி மூலம் தினமும் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக 5 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் 10 நாட்களுக்கு மேலாகியும் உப்பு தண்ணீர் வருவது இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தினமும் உப்பு தண்ணீர் வழங்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்