குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுது

Update: 2024-03-10 18:09 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வார்டு மீனவர் தெருவில் உள்ள ஆழ்துளை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி நீண்ட நாட்களாக பழுதாகி உள்ளது. இதைச் சரி செய்ய பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் சரி செய்யாமல் உள்ளனர். வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வார்டு மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டி மற்றும் மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்