அரக்கோணத்தை அடுத்த மேல்ஆவதம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. தேங்கிய தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணதாசன், அரக்கோணம்.