குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-06-11 16:57 GMT

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-ராஜேஷ், சேலம்.

மேலும் செய்திகள்