குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார்

Update: 2023-05-17 09:47 GMT


பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கழிவுநீர் கால்வாய் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதால், அதில் கழிவு நீர் கலந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்