மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள், ஏழைகள் குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஞானமணி, சீர்காழி