வீணாகும் குடிநீர்

Update: 2022-07-19 11:56 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் பட்டமங்கலம், தேவூர்,வெண்மணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் தினமும் செல்கிறது. தற்போது ஒரு வாரமாக போலீஸ் லைன் பகுதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடி தண்ணீர் வீணாக தெருவில் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கீழ்வேளூர்.

மேலும் செய்திகள்