சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2022-12-07 08:53 GMT

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முன்பு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்