குளம் போல் காட்சி அளிக்கும் பள்ளி வளாகம்

Update: 2022-11-13 10:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பள்ளியின் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளிக்கு சென்று வர மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தியும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்