நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே மழைக்காலங்கள் தொடங்குவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப் பகுதிகளில் மழைநீர் செல்லும் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எக்னாமூர்த்தி, வெண்ணந்தூர், நாமக்கல்.