ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 16, 17, 18, 20, 12 ஆகிய வார்டுகளில் யாரேனும் இறந்து விட்டால், அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. உடல்களை அடக்கம் செய்ததும், சில சடங்குகளை செய்ய தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதாகி 3 மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அடிபம்பை சீர் செய்வார்களா?.
-நித்தியானந்தம், காரை.