ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் அமைந்துள்ள பொன்னுசாமி ஐ.டி.ஐ. எதிர்புறத்தில் சுடுகாடு உள்ளது. இங்கு ஈமச்சடங்கு வசதி செய்வதற்கு தண்ணீர் வசதி இல்லை. மேலும் அங்கு மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் அங்கு இறந்தவர்கள் உடல்களை கொண்டு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், பொம்மிக்குப்பம்.