சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமம் மாரியம்மன் நகரில் சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது வரை இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.