விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி நெசவாளர் காலனியில் கடந்த சில நாட்களாகவே போதிய அளவில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. ஜல்ஜீவன் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் குடிநீர் வினியோகம் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநிர் இன்றி மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?