கம்பம் ஏகலூத்து சாலையில் ஆலமரக்குளம் அருகே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அடிகுழாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த அடிகுழாய் பழுதடைந்து காட்சிப்பொருளாக மாறிவிட்டது. மேலும் அடிகுழாயை சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே பழுதடைந்த அடிகுழாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.