சீரான குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2026-06-21 14:15 GMT

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் எட்டாக் கனியாக உள்ளது. ஒகேனக்கல் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரில் மாசு கலந்து வருவதால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவும், சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்