ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-06-21 18:50 GMT

ஆரணி தாலுகா சத்திய விஜயநகரம் (எஸ்.வி.நகரம்) ஊராட்சிக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கிராம மக்களுக்கான சுடுகாடு பாதையில் அரிச்சந்திரன் கோவில் அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அது, நீண்ட நாட்களாக மூடியே கிடக்கிறது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-தண்டபாணி, எஸ்.வி.நகரம். 

மேலும் செய்திகள்