பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்ஜம்பட்டியில் உள்ள 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஜிஞ்சம்பட்டி, சேகினாம்பட்டி, நீசானுர் மற்றும் பட்லப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து தினசரி 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீரை பிடித்து அருந்தி வந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படாத காரணத்தினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்.