வீணாகும் குடிநீர்

Update: 2026-02-09 08:31 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்பு கார தெருவில் இருந்து உத்தண்டி குளம் செல்லும் வழியில் ஆற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மீது சுமார் 12 இன்ச் உள்ள குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக உடைந்து பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர் முழுவ தும்வீணாகிவருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி கழிவுநீராக மாறி வருவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்