மதுரை மாநகர் கே.புதூர் பகுதியில் குடிநீர் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்று துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த குடிநீரால் டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?