பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-09-27 17:09 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரியில் கச்சராயனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி தண்ணீர் இல்லாமல் காணப்படுவதால் மாணவ-மாணவிகள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும் செய்திகள்