சேலம் மாவட்டம் தாரமங்கலம் 9-வது வார்டு அருணாசலம் புதூர் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக இதேநிலையில் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரி செய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-மணிமன்னன், தாரமங்கலம், சேலம்.