உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களில் மிக குறுகிய நேரம் மட்டுமே வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது தேவைக்காக பணம் கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.