நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் சாஸ்தா கோவில் அருகே சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து செல்கிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியன், வடிவீஸ்வரம்.