நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் திருவாரூர், நாகை பகுதிக்கு செல்ல பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் போடப்பட்ட அடி பம்பு கடந்த 10 நாட்களாக உடைந்த நிலையில் உள்ளது. இந்த அடி பம்பு மூலம் குடிநீர் வசதி பெறும் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் இதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
பொதுமக்கள். கீழ்வேளூர்....