குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2022-09-15 17:38 GMT

சேலம் தாதகாப்பட்டி 55-வது வார்டு திருஞானம் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்து 10 நாட்களுக்கும் மேலாகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக தினந்தோறும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் முன்பு போல் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-துரை சந்திரன், தாதகாபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்