தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரபடாமல் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, பொம்மிடி, தர்மபுரி.