கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-13 08:51 GMT

வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கவிளை பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல அரசு நிலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால், கால்வாய் சுருங்கி வருகிறது. அத்துடன் மழைகாலங்களில் மழைநீர் பாய்ந்து செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை மீட்டு கால்வாயை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபின்,வேங்கவிளை

மேலும் செய்திகள்