புதர் காடாக மாறும் விளைநிலம்

Update: 2022-09-01 08:08 GMT

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பத்தறை ஏலாவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஏலாவில் இருந்து உபரிநீர் வெளியேறும் வடிகால் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல் ஏலாவில் தேங்கி நிற்பதால் வயல்வெளி முழுவதும் புதைகுழிகளாக மாறி வருகிறது. மேலும், புதர்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வயல்வெளியில் இருந்து உபரிநீர் வெளியேற தகுந்த வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பத்தறை.


மேலும் செய்திகள்