சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கடந்த 3 ஆண்டுகளாக ஆழ்துளை தண்ணீர் குழாய் (அடிபம்பு) பழுதாகி, மண்ணில் புதைந்து கிடக்கிறது. இதனை சரி செய்ய கோரி சாமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை உடனே சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-ரமேஷ், சேலம்.