பஸ் நிலைய வளாகத்தை திறப்பார்களா?

Update: 2024-03-17 17:25 GMT

வாலாஜா நகருக்குள் திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார், அரசு பஸ்கள் நகராட்சி நுழைவு வாயிலின் எதிரே உள் நுழைந்து சோளிங்கர் ரோட்டிலும், காந்தி சதுக்கம் வழியாகவும் செல்கின்றன. அதேபோல் காந்தி சதுக்கம் வழியாக உள்ளே நுழைந்து நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலை வழியாக திருவண்ணாமலை, வேலூர் போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலைய வளாகத்துக்குள் வந்து செல்ல தடை செய்து பஸ் நிலைய வளாகம் முழுவதும் மூடியதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பஸ் நிலைய வளாகத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் முன்வருமா?

-ஹரிகரன், வாலாஜா.

மேலும் செய்திகள்